பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்லும், மேல் நோக்கி மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும், நிருவாணத்தை நோக்கியே செல்லும். 'இந்தக் கரை' என்பது (ஒருவருடைய) அகத்தே அமைந்துள்ள ஆறு புலன்களின் களன்கள். 'அந்தக் கரை' என்பது புறத்தேயுள்ள ஆறு பொறிகளின் களன்கள். 'நட்டாற்றில் ஆழ்தல்' என்பது மயக்கத்திற்கும் காமத்திற்கும் உரிய பயர். 'ஒரு திடரில் தட்டி மாட்டிக்கொள்ளல்" என்பது தான் என்ற அகங்காரத்தின் பெயர். 'மனிதர் கைகளில் அகப்படுதல்' என்பது என்ன? இல்வாழ்வோன் ஒருவன் சமூகத்திலே வாழ்கிறான், ஆனந்தப்படுவோருடனே (சேர்ந்துதானும்)ஆனந்திக்கிறான்.துக்கப்படுவோருடனே சேர்ந்து தானும்) துக்கிக்கிறான். இன்பமடைவோருடனே (சேர்ந்து தானும்) இன்பம் நுகர்கிறான். துயரப்படுவோருடனே (சேர்ந்து தானும்) துயரப்படுகிறான், எல்லாவகைத் தொழில்களிலும் சம்பந்தப்படுகிறான். இதுதான் 'மனிதர் கைகளில் அகப்படுதல்' என்பது. 'மற்றவர் கைகளில் அகப்படுதல் என்பது என்ன? எவராவது ஒரு பிக்கு தேவர்களுடைய இனங்களிலே ஒன்றில் தாம் பிறக்க வேண்டும் என்றும், 'எனது சிலத்தினாலோ, பயிற்சியினாலோ, *ஏதாவது தபசினாலோ, துறவு வாழ்க்கையினாலோ ஒரு தேவனாகவோ, அல்லது தேவர்களில் ஒருவனாகவோ தோன்ற வேண்டும் என்றும் விரும்புதலாகும். இதுவே மற்றவர் கைகளில் அகப்படுதல். ' "சுழலில் சிக்கிக்கொள்ளல் என்பது ஐம்புலன்களின் இன்பங்களுக்கும் '(தானாக) உள்ளூர உளுத்துப் போதல் என்பது என்ன? எவராவது ஒருவர் ஒழுக்கக் குறைவுள்ளவராகவோ, தீவினையாயாளராகவோ, மாசுடையராகவோ, சந்தேகத்திற்கிடமான நடையுடையவராகவோ, கரவடச் செயல்களுடையவராகவோ இருத்தல் அவர் துறவற விரதங்களை மேற்கொண்டிருப்பினும், சிறவியாகார்: விரதங்களை மேற்கொண்டிருப்பினும்,அவர் புனிதவாழ்வுடையவராகார் உள்ளே உளுத்து, ஆசைகள் நிறைந்து, 'சுத்தத்திற்குப் பிறந்தவரே அவர். அத்தகையவரே (தாமாக்) உள்ளூர் *உளுத்துப்போனவர். / புத்தரின் போதனைகள்