15
கழுதை ஏணிமேல் ஏறும்பொழுது, பெண்களிடம் நாம் ஞானத்தைக் காணலாம். -யூதர்
பெண்ணுக்குக் கூந்தல் தான் நீளம், மூளை கட்டை.
- கால்மிக்
பெண் முற்றிலும் ஆணின் உடைமையாகாள்.
-குர்திஸ்தானம்
மன்னன், மாது, குதிரை-மூன்றையும் நம்பவேண்டாம்.
-பாரசீகம்
பெண்ணால் துயரமே வரும், ஆயினும் பெண் இல்லாத வீடே இருக்க முடியாது. -( , , )
இரண்டு பெண்களும் ஒரு வாத்தும் இருந்தால் போதும் - அது ஒரு சந்தையாகிவிடும். -( , , )
பெண்பிள்ளைக்கு இருமுறை பயித்தியம் பிடிக்கும்: அவள் காதல் கொண்ட சமயம், தலை நரைக்கத் தொடங்கும் சமயம். -( , , )
குடியானவனுக்கு வேண்டியது நிலம், பிரபுவுக்குக் கௌரவங்கள், சிப்பாய்க்கு யுத்தம், வியாபாரிக்குப் பணம், விவசாயிக்கு அமைதி, தொழிலாளிக்கு வேலை, சித்திரக்காரனுக்கு அழகு, பெண்ணுக்கு உலகம் முழுவதும் தேவை. -( , , )
பாடும் பெண்ணுக்கு அகமுடையான் தேவை.
-அல்பேனியா
அழகான பெண்ணும், நீண்ட கிழிசலுள்ள அங்கியும் எந்த ஆணியிலும் மாட்டிக் கொள்ளும்.
- இங்கிலாந்து
விகாரமான ஸ்திரீ வயிற்றுவலி, அழகுள்ளவள் தலைவலி.
-( , , )
பத்து வயதில் பெண் தேவகன்னியா யிருப்பாள், பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போலிருப்பாள், நாற்பதில் சயித்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள். - இங்கிலாந்து
பெண்ணின் முன்பாகத்திற்கும் கழுதையின் பின்பாகத்திற்கும், பாதிரியாரின் எல்லாப் பாகங்களுக்கும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். -( , , )