74
நோய் வந்தவுடனேயே அதைக் கவனிக்க வேண்டும்.
நோயின் கசப்பிலிருந்துதான் மனிதன் ஆரோக்கியத்தின் இனிமையை அறிகிறான். -கடலோனியா
நோயாளியின் நண்பன் அவனுடைய கட்டில் தான்
நோயை மறைத்தல் அபாயம். -லத்தீன்
நோயைக் கண்டுபிடித்தலே ஆரோக்கியத்திற்கு ஆரம்பம்
வரும்போதுநோய் குதிரைமேல் வரும், நீங்கும்போது நடந்து செல்லும். - இங்கிலாந்து
காலந்தோறும் நோயும் மாறுகின்றது. -( , ,)
தடுமனுக்கு உணவு, காய்ச்சலுக்கு பட்டினி. -( , ,)
புண்ணும் கட்டியும் எங்கு வேண்டுமானாலும் உண்டாகும்.
பிணி ஒவ்வொரு மனிதனுக்கும் யஜமானன். -டென்மார்க்
பிணியே வராதவன் முதல் வகுப்பிலேயே இறந்து போவான்
நோயாளியின் அறை பிரார்த்தனைக் கூடம்.
நோயாளி எதுவும் பேசலாம். - இதாலி
நோயுற்ற காலங்களில் ஆன்மா தன் வலிமையைச் சேர்த்து கொள்கின்றது. -லத்தீன்
நோய் நாம் யார் என்பதைக் காட்டுகின்றது. -( , ,)
நோயாளிக்கு தேனும் கசக்கும். -ரஷ்யா
வைத்தியம்
காலம்தான் தலை சிறந்த வைத்தியர். -யூதர்
ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.