பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

  • பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்

திறன்தெரிந்து கூறப் படும். அ. திருவள்ளுவர்

  • கொலை ஒக்கும் கொண்டுகண் மாறல், அ. நான்மணிக்கடிகை
  • கோள்செவிக் குறளை காற்றுடன் நெ ருப்பு.
ைகொன்றை வேந்தன்

அவநம்பிக்கை

  • வாழ்க்கை ஒரு போராட்டம். ஒருவன் நம்பிக்கையை எளிதில் இழந்துவிட்டால், அவன் இரண்டு கடமைகளிலிருந்து வழுவியவனாகிறான். மனிதனுக்குரிய தலைசிறந்த பண்பாகிய மனஉறுதியை அவன் இழக்கிறான். உலகிற்கு வழிகாட்டி ஆள்கின்ற பரம கருணாமூர்த்தியான இறைவனையும் மறுத்தவனாகிறான். அ ஜென்போர்ட்டர் * ஒரு தொழிவை அது நடக்காது என்று நம்புதல் அதை நடவாமற் செய்வதற்கு வழி, அ கால்வியர், * ஒரு காரியத்தை நாம் செய்யமுடியும் என்று உணர்வதே அதன் வெற்றியாகும். ஐயப்பட்டு அவநம்பிக்கை கொள்வதே தோல்விக்கு நிச்சயமான வழியாகும் * எமக்குத் துணையாவார் வேண்டும் என்று எண்ணித்

தமக்குத் துணையாவார்த் தாம்தெரிதல் வேண்டா: பிறர்க்குப் பிறர்செய்வது உண்டோமற்று இல்லை தமக்கு மருத்துவர் தாம். அ பழமொழி

  • இனியாரும் இல்லாதார் எம்மின் பிறர்யார்?

தனியேம்யாம் என்றுஒருவர் தாம்மயல் வேண்டா முனிவில ராகி முயல்க முனிவில்லர் முன்னியது எய்தாமை இல், அ பழமொழி