பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ս. յauoot»onյուի :i- 203

  • =

of நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதை எவ்வளவு வேகத்தில் அடையலாம் என்பதிலும். முன்னேறிச் செல்வதற்குரிய வழி முறைகள் என்ன என்பதிலுமே கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன. அ. ஜவஹர்லால் நேரு முதலாளித்துவ அமைப்பு முழுவதும் ஏதாவது ஒருவகையான செல்வம் ஈட்டும் ஆர்வமுள்ள சமூகத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. சோஷலிஸ் சமுதாயம் செல்வம் சேர்க்கும் இந்த ஆர்வத்தைக் கைவிட முயற்சி செய்ய வேண்டும். இதற்குப் பதிலாகக் கூட்டுறவை மேற்கொள்ள வேண்டும். வி ஜவஹர்லால் நேரு தகுதி எத்தகைய தகுதியையும் நெடுங்காலம் மறைத்து வைக்க முடியாது. அது கண்டுபிடிக்கப் பெறும். ஒருவன்.அதைத் தானே வெளிக் காட்டிக்கொண்டால்தான், அது குறைவடையும், அதற்குப் போதிய சன்மானம் எப்பொழுதும் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், பிறர் அத்தகுதியை அறிந்தேயிருப் பார்கள். அ செஸ்டர்ஃபீல்டு தகுதியும் நல்லதிருஷ்டமும் நெருக்கமுள்ளவை என்பதை மூடர்கள் ஒருபோதும் உணர்வதில்லை. அ. கதே தண்டனை தீயவன் ஒருவன் தண்டிக்கப்பெறுவது நோயாளிக்கு மருந்து கொடுப்பது போலாகும். எல்லா வகைத் தண்டனையும் ஒரு வகை மருந்துதான். அ பிளேட்டோ குற்றத்திற்குத் தண்டனை அளித்தால் குற்றவாளிக்கு மட்டும் கேவலம் அளிக்காவிட்டால் சமூகம் முழுவதற்கும் கேவலம், அ பிளம்ெமன் i