உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2欲 லா. ச. ராமாமிருதம்

பிச்சையெடுக்க மனம் எம்மட்டில் துணிந்திருக்கிறது ? ஹோட்டல் டிக்கெட் புஸ்தகத்தையும், பாங்கு புஸ்தகத் தையும், மணி பர்சையும், எதிர் வீட்டு உறவையும், உத்யோக பத்திரத்தையும் இத் த ைன தைரியங்களின் கலவையான என் மமதையையும் எம்மட்டில் என்னால் மறக்க முடியும் ?

தெருக்களைத் தாண்டி வெகுதூரம் நடந்தேன். வாசல்கள் சில திறந்திருந்தன. பல மூடியிருந்தன. எந்தப் படியை ஏறவும் மனம் துணிந்திருந்தால்தானே ! நடந்து நடந்து நாக்குக்கூட வரண்டுவிட்டது. இன்று சோறு இல்லாவிட்டாலும் போகிறது. தாகத்துக்குச் சோதனை யாக ஒரு சோடாக்கடை கூடத் தென்படவில்லை. நான் இப்போது அலையும் இ ட த் தி ல் தெருவிளக்குக் கூடச் சரியாக எரியவில்லை. விட்டு விட்டு அணைந்து ஏற்றிக் கொள்கிறது. வழி தப்பிவிட்டதோ ? சந்தேகம் வந்து விட்டது முன்னிலாவில் வெள்ளைத் துணி போர்த்த ஒரு உருவம் தெரிந்தது. சற்றுத் தயங்கி நின்றேன்.

திண்ணையில் சாய்ந்திருந்தவர் சட்டென எழுந்து உட்கார்ந்தார். . .

'யாரைத் தேடlங்க: வாங்க, வாங்க-உட்காருங்கஉட்கார்ந்து பேசுங்க-'

எநான்-நான்-எனக்கு”

விழிகளில் எரிநீர் உறுத்திற்று. இது கோபமா? அவமானமா? பயமா??? உலகில் பிச்சை புகுந்த அத்தனை ஆண்டுகளின் அடையாளத் துயரமா????

இச்சமயம் ராதை என்னைப் பார்த்தால் என்ன சொல்வாள்? என்னை இடிக்க மாட்டாள்?? r

இதெல்லாம் எத்கனை அனாவசியம் தன் மனசில்தான் பெரிய புத்தன், பட்டினத்தார்னு எண்ணம் தன் வீட்டுச் சோற்றைத் தான் சாப்பிடுவதை விட்டுவிட்டு, இதென்ன கெளரவப் பிச்சையா? வேண்டுதல் பிச்சையா?"