பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



'தெரியாது.”

"சரி! நான் சொல்லுகிறேன்,' என்ற மேகநாதன், மின்சாரம் உலகின் எந்த இடத்திலிருந்தும் ஆகாயத்திற்குச் சென்று மின்னலாவதில்லை. அந்த மின்சாரம் மேகங்களிலிருந்தே உற்பத்தியாகி; மேகங்களுக்கு மத்தியிலேயே மின்னவும், இடிக்கவும் செய்கின்றன.

ஈரப்பசை உள்ள காற்று ஆகாயத்தை நோக்கி மேலே செல்லும் போது, குளிர்ச்சியால் காற்றில் உள்ள ஈரப்பசை மிக நுண்ணிய நீர்த்துளி, அல்லது பனித் துகள்களாக மாறி மேகங்களாக உருப் பெறுகின்ற்ன. அவை-மேல் பகுதி, நடுப் பகுதி, அடிப் பகுதி என்கிற இயல்புடன் கூடியவைகளாக உள்ளன.

மேகத்தின் மேல் பகுதிதல் உள்ள காற்று, நீர் ஆகிய அணுக்களில், நேர் மின்சாரம் அதிகமாகவும், மேகத்தின் மையப் பகுதியில் உள்ள அணுக்களில், எதிர் மின்சாரத் துகள்கள் கூடுதலாகவும் இருக்கும். அந்த மேகத்தின் அடிபாகம் பெரும்பாலும் எதிர் மின்சாரத் துகள்களாகவோ, சில சமயம் நேர் மின்சாரத் துகள்களாகவோ காணப்படும்.

ஒரே மேகத்தின் மேல் தளத்தில், நேர் மின்சாரத் துகள்கள் கொண்ட அணுக்களும்;

பஞ்ச-7