பக்கம்:நான்மணிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்மணிக்கடிகை

11

நான்மணிக்கடிகை 11

கன்றாமை வேண்டும் கடிய, பிறர்செய்த நன்றியை நன்றாகக் கொளல் வேண்டும் - என்றும் விடல் வேண்டும் தங்கள் வெகுளி, அடல் வேண்டும்

ஆக்கஞ் சிதைக்கும் வினை.

(11)

பல்லினான் நோய்செய்யும் பாம்பெலாங் கொல்லேறு கோட்டான் நோய்செய்யுங் குறித்தாரை - ஊடி முகத்தான் நோய்செய்வர் மகளிர், முனிவர்

தவத்தாற் தருகுவர் நோய்.(

(12)

)

பறைநன்று பண்ணமையா யாழின் நிலைநின்ற பெண்ணன்று பீடிலா மாந்தரின் -பண்ணழிந் தார்தலின் நன்று பசித்தல், பசைந்தாரின்

தீர்தலிற் தீப்புகுதல் நன்று.

(13)

வளப்பாத்தி யுள்வளரும் வண்மை, கிளைக்குழாம் இன்சொற் குழியுள் இனிதெழுஉம் -வன்சொல் சரவெழுஉங் கண்ணில் குழியுள் இரவெழுஉம்

இன்மைக் குழியுள் விரைந்து.

(14)


இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக -தன்னொடு செல்வது வேண்டின் அறஞ்செய்க, வெல்வது

வேண்டின் வெகுளி விடல். (

(15)

)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/13&oldid=1380355" இலிருந்து மீள்விக்கப்பட்டது