நான்மணிக்கடிகை
11
நான்மணிக்கடிகை 11
கன்றாமை வேண்டும் கடிய, பிறர்செய்த நன்றியை நன்றாகக் கொளல் வேண்டும் - என்றும் விடல் வேண்டும் தங்கள் வெகுளி, அடல் வேண்டும்
ஆக்கஞ் சிதைக்கும் வினை.
(11)
பல்லினான் நோய்செய்யும் பாம்பெலாங் கொல்லேறு கோட்டான் நோய்செய்யுங் குறித்தாரை - ஊடி முகத்தான் நோய்செய்வர் மகளிர், முனிவர்
தவத்தாற் தருகுவர் நோய்.(
(12)
)
பறைநன்று பண்ணமையா யாழின் நிலைநின்ற பெண்ணன்று பீடிலா மாந்தரின் -பண்ணழிந் தார்தலின் நன்று பசித்தல், பசைந்தாரின்
தீர்தலிற் தீப்புகுதல் நன்று.
(13)
வளப்பாத்தி யுள்வளரும் வண்மை, கிளைக்குழாம் இன்சொற் குழியுள் இனிதெழுஉம் -வன்சொல் சரவெழுஉங் கண்ணில் குழியுள் இரவெழுஉம்
இன்மைக் குழியுள் விரைந்து.
(14)
இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக -தன்னொடு
செல்வது வேண்டின் அறஞ்செய்க, வெல்வது
வேண்டின் வெகுளி விடல். (
(15)
)