பக்கம்:எனது நண்பர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கோவைப் பெருமகன் சி. கே. எஸ்.

யர்திருவாளர் கோவை சி. கே. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் தமிழகத்துப் பேரறிஞர்களில் ஒருவர். சைவப்பற்றும் தமிழ்ப்பற்றும் கொண்ட நல்லறிஞர். எழுத்தாலும் பேச்சாலும் இலக்கியப் பணி புரிந்த புலவர் பெருமகன். பி.ஏ. பட்டப் படிப்புக்குப் பாடநூலாகச் சேக்கிழார் என்னும் நூலை எழுதி உதவியவர். பெரியபுராணம் என்னும் நூலுக்கு உரை எழுதிச் சைவப் பெருமக்களுக்கு வழங்கிப் பெருமை பெற்றவர்.

எனது நண்பர்களாகிய கோவை ஜி. டி. நாயுடு, சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார், ஆர்.கே.சண்முகம் செட்டியார், பழையகோட்டைப் பட்டக்காரர் ஆகியவர்களின் உற்ற நண்பர்; கோவை நகராட்சி மன்றத்தில் பல தடவை உறுப்பினராக இருந்தும், ஒருமுறை துணைத் தலைவராக இருந்தும் பணி புரிந்தவர்.

சிறந்த வழக்கறிஞராக விளங்கி, கோவையில் பெரும் புகழ் பெற்றவர். இல்லறத்தை நல்லறமாக நடத்தி ‘சிவக்கவிமணி', ‘சைவப்பிதா’ என்ற பட்டங்களைப் பெற்றவர். தான் நல்ல வழியில் தேடிய செல்வங்களை எல்லாம் பல அறச் செயல்களுக்கு வழங்கித் துறவறத்தில் ஈடுபட்டு “சம்பந்த சரணாலயத் தம்பிரான் சுவாமிகள்”: என்ற பெயரையும் பெற்றுச் சிறந்து விளங்கி, சைவத் தமிழ் வாழ்வு வாழ்ந்து, தமது 83வது வயதில், இறைவனது திருவடியை அடைந்தவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/52&oldid=986321" இலிருந்து மீள்விக்கப்பட்டது