60 —C. - தமிழின் சிறப்பு)
ஆண்டுகளுக்கு மேலாயின. இன்னும் ஆறாவது நிலப் பரப்பை எவராலும் காண முடியவில்லை.
2. கிழக்கே இருந்து வருகிற காற்று'கொண்டல் எனவும், அது மேகத்தின் மூலம் கடல் நீரை அள்ளி மழையாகப் பொழிந்து முல்லைநிலத்தை வாழ்விக்குமெனவும்:மேற்கே இருந்து வருகிற காற்று 'கோடை எனவும், அது ஆற்றின் மூலம் நீரைக் கொண்டுவந்து மருத நிலத்தை வாழ்விக்குமெனவும், வடக்கே இருந்து வருகிற காற்று 'வாடை என்வும், இது பயிர்களை வளர்க்கும் எனவும், தெற்கே இருந்து வருகிற காற்று "தென்றல்” எனவும், அது மக்களை வளர்க்கும் எனவும் ஆய்ந்து, தமிழகத்துக்கு நான்கு புறத்திலிருந்தும் காற்றுகள் வருமெனக்கண்டு, அவற்றை வகைப்படுத்தி, தொகைப்படுத்தி, பெயர்ப்படுத்தி,செயற்படுத்தி
வந்திருக்கின்றனர். -
3. உலகில் பேசப்படும் மொழிகள் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவை எனவும், அவற்றில் எழுத்துள்ள மொழிகள் எழுநூற்றுக்கும் உட்பட்டவை எனவும், அதிலும் இலக்கண இலக்கியம் அமைந்த மொழிகள் இருநூற்றுக்கு மேற்பட்டவை எனவும் மொழி அறிஞர் கூறுவர். இவற்றுள், எந்த மொழியும் மூன்றாகவோ இரண்டாகவோ இருக்கவில்லை. எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது. தமிழ் மொழி ஒன்றை மட்டுமே இயல், இசை நாடகம், என ஆய்ந்து வகைப்படுத்தி பின் - தொகைப்படுத்தி, மூன்றாக அமைத்துக் கூறியுள்ளனர்.
4. எல்லா மொழிகளுக்கும் இலக்கணம் ஒன்றாகவே அமைந்துள்ளது.தமிழ்மொழிக்கு மட்டும் இலக்கணம் கண்ணாற் காணப்படுபவை மன்த்தால் நினைக்கப் படுபவை என