இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஓடை
பந்துவராளி ரூபகம்
எடுப்பு
ஓடை ஆட உள்ளம் தூண்டுதே!—கல்லில்
உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்.
மேல் எடுப்பு
பாட இந்த ஒடை எந்தப்
பள்ளி சென்று பயின்ற தோடி !
ஏடு போதா இதன்கவிக் கார்
ஈடு செய்யப் போரா ரோடி !
அமைதி
நன்செய் புன்செய்க் குணவை யூட்டி
நாட்டு மக்கள் வறுமை யோட்டிக்
கொஞ்சிக் குலவிக் கரையை வாட்டிக்
குளிர்ந்த புல்லிற் கின்பம் கூட்டி
நெஞ்சில் ஈரம் இல்லார் காண
நீளுழைப்பைக் கொடையைக் காட்டிச்
செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்
சீருக் கேற்ப முழவை மீட்டும்.
7