இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விண்மீன்
நாராயணி
ஆதி
எடுப்பு
அந்தி மயக்கில்வான் சிந்திய ஒளிக்கற்கள்
அழைக்கும் வகையென் சொல்வேன் தோழா!—கண்சிமிட்டி
அழைக்கும் வகையென் சொல்வேன் தோழா!
மேல் எடுப்பு
சொந்தம் உரிமையோடு தொலைவில் இருந்தழைக்கும்
இந்த விழிகள் இன்பம் தந்த விழிகள்தாமோ?
அமைதி
விண்ணில் அரசோச்சும் வெண்ணிலவின் சொத்தே ?
வெய்யல் உழவன் காலை வீசிய நல்வித்தோ ?
கண்கவர் விண்மீன்கள் கழைதந்த ஒளிமுத்தோ ?
கடல்வளர் பவளக் கொடியின் மணிக்கொத்தோ ?
10