இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நிலவே வாழி!
காம்போதி
ஆதி
எடுப்பு
நீலத் திரைகடல் மேலேஎழும்வெண்
ணிலவே ! நீ வாழியவே !
மேல் எடுப்பு
பாலை நிறைத்து வைத்தாய்
பரந்த கடல்வெளியில் !
பசு வெள்ளிப் பாய்விரித்துப்
பருக அழைக்கின்றாயோ ?
அமைதி
நாட்டில் பொருள் முடக்கும் நரிகளைப் போலன்றி
நல்லொளி விழியினால் மெல்ல நகை காட்டி
வாட்டும் துயரமோட்டி மனத்திலின் பத்தைக் கூட்டி
வள்ளலைப் போலென்றும் அள்ளி அள்ளி வழங்கும்,
12