இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பந்துவராளி
நீலக்கடல் தாண்டி மகனே
நீபொருள் விற்று வந்தாய்
நீலக்கடல் தாண்டி-முரசம்
நீகொட்டி வாழ்ந்திருந்தாய்.
மோகனம்
குன்றைப் பிளந்த தோள்கள்-வான்தொடு
கோட்டை சமைத்த கைகள்
இன்றெங்கே போனதடா-அந்தோ
மோகனம்
எண்ணி நினைத்த துண்டா?
வடக்கில் இமயமலை-உனக்கு
வணங்கிப் பணிந்த துண்டோ?
அடக்கிப் பிறநாட்டார்-உன்னை
ஆளப் பொறுப் பாயோ?
43