38
வெங்கலச்சிலை
துக்ளக் என்ற அரசனின் விவேகமற்றச் செயலால் பல்லாயிர மக்கள் வழியிலேயே இறந்தனர்.
ஒரே ஒரு நாஜி இயக்கத்தின் நாசவேலையால் நானிலம் இன்றும் கண்ணீர் வடிக்கின்றது. இதர லியின் பாசிச வெறியாட்டம் எவ்வளவு கொடுமைகள் செய்யத் துணிந்தது என்பதை இதற்குள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அமெரிக்க அணுகுண்டின் அதிர்ச்சி ஹிரோஷிமா மக்களுக்கே தெரியும், இப்படியே உலகம் நெடுநாட்களாக நடந்து கொண்டிருக்கின்றது.
வெளிநாட்டுத் தொல்லைகள். அடிக்கடி வந்தாலும், உள்நாட்டை நன்றாகச் செப்பனிட்ட, பசித்த எண்ணற்றவர்களின் வாயை மூடிய, அவர்கள் இருண்ட வாழ்வை மலரச்செய்த, எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடமாக்கிய வீரன் லெனின் வெங்கலச் சிலையை நினைவுபடுத்திக் கொள்கிறோம்.
சேயின் நோய் நீங்கத் தாய் மருந்துண்பதைப் போல், தனயன் அறிவாளியாகத் தந்தை கல் சுமப்பதைப்போல், மக்களின் வறுமை நீங்க மாபெரிய வீரர்கள் சிறையில் மடிந்ததைப் போல், மாஸ்கோவின் மணம் மண்டலமெல்லாம் வீச மார்பில் குண்டேந்திப் பல நாட்கள் படுக்கையில் கிடந்து தனது கடைசி வணக்கத்தைச் செய்து மீளாத் தூக்கத்திலாழ்ந்த மாவீரன் லெனின் வெங்கலச் சிலையை வையகத்தார் கண்ணீரால் கழுவுகின்றனர்.