இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30
வாணிதாசன்
வெள்ள மாக மக்களெலாம்
விரும்பி விரும்பி உனைச்சுற்றி
உள்ளே சுழலும் படியூடே
உன்மேல் ஏறிச் சுழல்விளக்கே !
கொள்ளும் இன்பம் என்னாங்கொல்?
குன்றை ஊரை நீள்கடலை
அள்ளும் காற்று வெளியிருந்தே -
அழகு படுத்திக் காட்டுவதோ?................................... 9
சுங்கம் வாங்கும் கடலோரத்
துறையில் சுழலும் சுழல்விளக்கே !
எங்கெங் கிருந்தோ வந்தாலும்
எந்தக் கப்பல் ஆனாலும்
கங்குல் கிழித்து வழிகாட்டிக்
கரையை உணர்த்தும் மேலான
தங்கக் குணத்துக் கீடிந்தத் .
தரையில் எதைநான் சொல்வேனே !........................... 10
"இருமா காய்ச்சி அரையடிக்காய்
இவையே மற்றை அரையடிக்கும்
வருமா றுணர்க"
என்னும் 'விருத்தப் பாவியல்' நூற்பாவுக்கு ஏற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்.