பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாமி வேலு என்பவன்தான்
சாது வான பையனாம்!
மாமி கோதை வீட்டுக்கே
மாடுகள் மேய்த்து வந்திட்டான்!

தங்க ராசு, அவன்மாமா!
தங்க மான மனிதர்தான்!
புங்கம் பட்டி ஊருக்குள்
பூமி சொத்து பெற்றிருந்தார்!

கோதை-ராசு தம்பதிக்கே
குடும்பத் தொழிலே பயிர்த்தொழில்தான்!
நாதன், நங்கை அவர் மக்கள்!
நமது வேலு பணியாள் தான்!