கோவை. இளஞ்சேரன்
29
திருவள்ளுவர்-யாம்
இவற்றிற்கெல்லாம் அப்பால் தம் பட்டறிவின் உறுதிப் பாட்டையும், சொல்லும் கருத்தின் அழுத்தத்தையும் பொதியவைத்து ‘யாம்' என்று பேசுவது திருவள்ளுவர் பேச்சு.
“பெறுமவற்றுள் யாம்அறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே நல்ல பிற” (61)
“யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற” (300)
“மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில்” (1071)
யாம் பட்டு அறிந்தவரை,
மக்கட்பேறு எல்லாப் பேற்றினும் சிறந்தது வாய்மையே பண்புகளில் சிறந்தது
கீழ்மக்கள் உருவத்தில் மாந்தராயினும்
இழிவில் ஒப்பில்லாதவர்”
நேருக்குநேர் திருவள்ளுவர்
இவை இக்குறட்பாக்களின் கருத்துக்கள். இக்கருத்துக் கள் யாம்' என்று திருவள்ளுவர் தம்மைக் குறித்துச் சொல்லப்பட்டவை. இதனால் அவர் நம்முன் நேருக்கு நேர் நின்றுபேசுவதாக அமைந்துள்ளன.
“யாம் அறிந்தவற்றுள்”,
“யாம் மெய்யாக் கண்டவற்றுள்”,