418 புல்லின் இதழ்கள்
“ஆமாம், இல்லாவிட்டால் உங்களைப் புரிந்து கொள்ள இத்தனை வருஷங்கள் வேண்டி வந்திருக்குமா? பாருங்கள், இவன்கூட “ஆமாம் ஆமாம் என்று கையையும் காலையும் ஆட்டுகிறதை!’ என்று சுசீலா குழந்தையைக் காட்டினாள். ஹரி அதன் கன்னத்தில் முத்தமிட்டான்: உச்சியில் முத்தமிட்டான்.
இன்னும் வேறு எங்கேயாவது கச்சேரிக்கு ஒப்புக் கொண்டிருக்கிறீர்களா?’ ‘
ஏன்?”
நேற்று நீங்கள் இல்லாமற் போய் விட்டீர்களே!’
ரொம்பக் கஷ்டப்பட்டுப் போனாயோ?”
‘அதெல்லாம் துளிக்கூட இல்லை . எல்லாரும் அதிச
யப்பட்டார்கள்; முதற் பிரசவம் மாதிரியே இல்லையே என்று. ‘
ஹரி மெல்லச் சிரித்தான்.
ஏன் சிரிக்கிறீர்கள்?’’
- நான் நேற்று முருகன் சந்நிதியில் வேண்டிக் கொண் டது வீண் போகவில்லை.
‘ என்ன வேண்டிக் கொண்டீர்கள்?’’
‘முருகா! இது சுசீலாவுக்கு முதற் பிரசவம். முதற் பிரசவம் என்றாலே எல்லாரும் பயப்படுகிறார்கள்; பய முறுத்துகிறார்கள். நீதான் என் சுசீயைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.”
நிஜமாகவா? கச்சேரிக்குப் புறப்பட்டால் உங்க ளுக்கு அதைத் தவிர வேறு நினைவே இருக்காதே?’’