இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஒப்பாரி
459
பத்துமணியாகும்-அய்ய பத்தரையும் பாசாகும் எட்டடுக்குத் தாம்பாளம் எடுத்துவைத்த நெய்த்தோசை எடுத்துப் பலுமாற-ஐயா எட்டு மணியாகும் எட்டு மணியாகும் எட்டரையும் பாசாகும் கோட்டை வாசலிலே கொழுந்து வந்து விக்குதிண்ணு கொண்டவரைத் தோத்தேன்-எனக்குக் கொழுந்து மேல் ஆசையுண்டோ தெக்குக் கோட்டை வாசலில செவந்தி வந்து விக்குதிண்ணு சீமானத் தோத்தேன்-எனக்குச் செவந்தி மேல் ஆசையுண்டோ வடக்குத் தலை வாசலிலே மருவு வந்து விக்குதுண்ணு மன்னவரத் தோத்தேன்- எனக்கு மருவு மேல் ஆசையுண்டோ அஞ்சு படித் துறையும் அத்தருடன் பன்னீரும்-நான் அள்ளிக் குளிப்பாட்ட-நான் அகலத்தாள் ஆயிட்டேனே! தோட்டம் படித்துறையும் துறைமுகத்துப் பன்னிரும் தொட்டுக் குளிப்பாட்ட-நான் தூரத்தாள் ஆனேனில்ல பூத்த முருங்க பொன்பதிச்ச மேடையில-நான் பொன்பதிச்ச மேடையில போக வர நீதியில்ல காச்ச முருங்க கல் பதிச்ச மேடையிலே கல் பதிச்ச மேடையிலே-நான் காலு வக்க நீதியில்ல அரிராமர் கோட்டையில அல்லி ஒரு பெண் பிறந்தாள்