பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒப்பாரி

459


         பத்துமணியாகும்-அய்ய 
         பத்தரையும் பாசாகும் 
         எட்டடுக்குத் தாம்பாளம் 
         எடுத்துவைத்த நெய்த்தோசை 
         எடுத்துப் பலுமாற-ஐயா 
         எட்டு மணியாகும் 
         எட்டு மணியாகும் 
         எட்டரையும் பாசாகும் 
         கோட்டை வாசலிலே 
         கொழுந்து வந்து விக்குதிண்ணு 
         கொண்டவரைத் தோத்தேன்-எனக்குக் 
         கொழுந்து மேல் ஆசையுண்டோ 
         தெக்குக் கோட்டை வாசலில 
         செவந்தி வந்து விக்குதிண்ணு 
         சீமானத் தோத்தேன்-எனக்குச் 
         செவந்தி மேல் ஆசையுண்டோ 
         வடக்குத் தலை வாசலிலே 
         மருவு வந்து விக்குதுண்ணு 
         மன்னவரத் தோத்தேன்- எனக்கு 
         மருவு மேல் ஆசையுண்டோ 
         அஞ்சு படித் துறையும் 
         அத்தருடன் பன்னீரும்-நான் 
         அள்ளிக் குளிப்பாட்ட-நான் 
         அகலத்தாள் ஆயிட்டேனே! 
         தோட்டம் படித்துறையும் 
         துறைமுகத்துப் பன்னிரும் 
         தொட்டுக் குளிப்பாட்ட-நான் 
         தூரத்தாள் ஆனேனில்ல 
         பூத்த முருங்க 
         பொன்பதிச்ச மேடையில-நான் 
         பொன்பதிச்ச மேடையில 
         போக வர நீதியில்ல 
         காச்ச முருங்க 
         கல் பதிச்ச மேடையிலே 
         கல் பதிச்ச மேடையிலே-நான் 
         காலு வக்க நீதியில்ல 
         அரிராமர் கோட்டையில 
         அல்லி ஒரு பெண் பிறந்தாள்