இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காதல்
191
காதலி:கஞ்சிக் கலயம் கொண்டு
காட்டுக்கு போகையிலே கையலைச்சுக் கூப்பிட்டது காரணத்தைச் சொல்லு மச்சான்
காதலன்: பேரீச்சம் பழமே நீயே
பெரியடத்துக் கிரீடமே அஞ்சாறு ஆளோட-உன்ன யாரை விட்டுக் கூப்பிடட்டும்?
காதலி: மணந்திடுவேன் என்று சொல்லி
மாதக் கணக்காயிருச்சு கழுத்தில் தாலி கட்ட லேனா-நான் கயத்தப் போட்டுச் செத்திடுவேன்
காதலன்: இடுப்பே ஒரு பிடியே
இன்பமான ரதி கிளியே மதியான கண்ணே-உன்ன மறக்க மனம் கூடலியே
காதலி: மாமன் மகனிருக்க
மாலையிடும் சாமியிருக்க சொத்துக் கையி சாமிபய சொந்தமிண்ணு வாரானில்ல
காதலன்: காரமுள்ள சுண்ணாம்பாம்
கலயத்தில நீத்தி வச்சேன் நீத மற்ற சிவகிரில நிண்ணு போக நேரமில்லை
காதலி: வெள்ளி நிலாவே, நீயே
விடி நிலா ராஜாவே கன்னி களவு செய்ய கண் மறைஞ்சால் ஆகாதோ?
காதலன்: செவந்திப்பூப்போல உன் திரேகம்
வாழுத வயதிலேயே வாடி பொண்ணே ஓடிப் போவோம் இலுமிச்சங்கனி போல இருவருமே ஒரு செகப்பு வாழுத வயதிலேயே