பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காதல்

191




காதலி:கஞ்சிக் கலயம் கொண்டு

            காட்டுக்கு போகையிலே 
            கையலைச்சுக் கூப்பிட்டது 
            காரணத்தைச் சொல்லு மச்சான்

காதலன்: பேரீச்சம் பழமே நீயே

           பெரியடத்துக் கிரீடமே 
           அஞ்சாறு ஆளோட-உன்ன 
           யாரை விட்டுக் கூப்பிடட்டும்?

காதலி: மணந்திடுவேன் என்று சொல்லி

           மாதக் கணக்காயிருச்சு 
           கழுத்தில் தாலி கட்ட லேனா-நான் 
           கயத்தப் போட்டுச் செத்திடுவேன்

காதலன்: இடுப்பே ஒரு பிடியே

           இன்பமான ரதி கிளியே 
           மதியான கண்ணே-உன்ன 
           மறக்க மனம் கூடலியே

காதலி: மாமன் மகனிருக்க

           மாலையிடும் சாமியிருக்க 
           சொத்துக் கையி சாமிபய 
           சொந்தமிண்ணு வாரானில்ல

காதலன்: காரமுள்ள சுண்ணாம்பாம்

            கலயத்தில நீத்தி வச்சேன் 
            நீத மற்ற சிவகிரில 
            நிண்ணு போக நேரமில்லை

காதலி: வெள்ளி நிலாவே, நீயே

            விடி நிலா ராஜாவே 
            கன்னி களவு செய்ய 
            கண் மறைஞ்சால் ஆகாதோ?

காதலன்: செவந்திப்பூப்போல உன் திரேகம்

            வாழுத வயதிலேயே 
            வாடி பொண்ணே ஓடிப் போவோம் 
            இலுமிச்சங்கனி போல  
            இருவருமே ஒரு செகப்பு 
            வாழுத வயதிலேயே