த. கோவேந்தன் 89
திடமின்மையும் ஆறுதலின் மையும் அற்றுப் போய் விட்டன.
தீவினையும் துயரமும் முடிவுற்று, அமைதி என்னும் உறுதியுடன் நிலை கொண்டுள்ளது.
ஆசான் : என்றும் நிலையான ஒளியைக்கான உனது கண்களை நீயே திறந்து கொண்டாய்.
உன்னால் நீ ஏமாற்றப்படுவதோ உன்னாலே நீ அல்லல் படுத்தப்படுவதோ இனிமேல் இருக்காது.
ஓ அன்பனே! தெய்வீக அறிவு என்னும் நெடுஞ்சாலை வில் நுழைந்து, அழிந்து போகாமல் என்றும் நிலைக்கும் பேரின் பத்தைப் பெறுவாய்.
அறமுறை அறிவு
மாணவன் : ஒ ஆசானே உண்மையான, முழுமை யான அறிவை எனக்குக் காட்டுக.
உமது அறமுறையின் செயல்பாட்டை எனக்கு வெளிப் படுத்து.
அறிவு ஒளியால் எனது உள்ளத்தை அணிபெறச் செய்.
ஆசான் : வாழ்க்கையின் பொது அறமுறை மிகச் சரியானதும் முழுமையானது.மே.
அத்துடன் எதுவும் கூட்டவோ அதிலிருந்து குறைக்கவோ முடியாது.
அதில் மாற்றம் செய்யவோ, அதனைச் சீர்திருத்தவோ முடியாது.
எவரும் இதைத் தவிர்க்கவோ அதில் இருந்து தவறவோ முடியாது.