பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

31

இன்று தமிழினத்திலேயே ஒருவன்தான் வீரன்!

ஆனால், அந்த உண்மையான வரலாற்றுக்கு அடிப்படையாக இருக்கிறது ஒரே ஒரு வீரன் தான். அவர்தாம் தம்பி பிரபாகரன், வேறு, தமிழ் நிலத்திலே அப்படி ஒரு வீரனைக் காட்டமுடியுமா? அவனுடைய தன்னிகரற்ற வீரம் சான்றாக இருக்கிறது. வேறு எவரையாவது ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியுமா? வீரம் இருக்கிறது. என்று சொன்னால், அவனுக்கு இருக்கிறது தமிழ் வீரம். எனவே அந்த வீரத்தை வைத்துத்தான் உண்மையாகவே நமது தமிழ் இனம் வீரம் செறிந்ததாக இருந்திருக்க வேண்டும் என மதிப்பிட்டுக் கொண்டு ஆறுதல் பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இல்லையானால் நாம் அத்தனை பேரும் உண்மையாக ஒரு போலி உணர்வு உள்ளவர்களாகத்தாம் இருக்கிறோம்: அரசியலில் இருந்தாலும் சரி, அறிவியல், ஆராய்ச்சித் துறையில் இருத்தாலும் சரி: பேராசிரியர் தொழிலில் இருந்தாலும் சரி: அல்லது கலைத்துறையில் இருந்தாலும் சரி; அல்லது ஒரு பொதுத் துறையிலே இருந்தாலும் சரி: அல்லது ஒரு கட்சியிலே தலைமை தாங்கும் ஒரு பொதுத் தொண்டு நிலையிலே இருந்தாலும் சரி: பொதுத் தொண்டர்களாக இருந்தாலும் சரி - எந்த நிலையிலும் நம்மால் ஆரியத்தையோ, பார்ப்பனியத்தையோ, வடநாட்டு முதலாளியத்தையோ எதிர்த்து ஒரு சொல் சொல்ல முடியவில்லை என்று சொன்னால், பண்டைய இலக்கியங்களிலே காணும் வீரத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்கிறோம் என்று கூற முடியுமா? துணிந்து ஒரு சொல் சொல்ல முடியவில்லை

கலைஞர் ஆட்சி பற்றிய முன்கணிப்பு:

இறுதியாக நான், இராமதாசு (பா.ம.க.). நெடுமாறன் போன்றவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/41&oldid=1163314" இலிருந்து மீள்விக்கப்பட்டது