பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

நெஞ்சக்கனல்

பதற்கு அடையாளமாகத் தலையை மட்டுமே ஆட்டினார் நாதன்.

ஆனால் நாதனிடமிருந்த கம்பீரத்தினாலோ அல்லது பேச்சின் பெருமிதத்தினாவோ அனிச்சைச் செயலாகத் தன்னையறியாமலே எழுந்து நின்று அவரைப் பயபக்தியாகக் கைகூப்பி விடை கொடுத்தான் கலைச்செழியன். எழுந்து நின்ற பின்புதான் ‘தான் அந்த ஆளுக்காக எழுந்து நின்று விட்டோமே’ என்று தன் மேலேயே கோபம் வந்தது கலைச்செழியனுக்கு.

நாதன் தலைமறைந்தபின், “இந்தக்காலத்திலே இவருமாதிரி ஆள் பத்திரிகை நடத்தினா அதை இவரு மட்டும் தான் படிக்கனும். வேற ஒரு பய தொடமாட்டான். புனிதமாவது வெங்காயமாவது?” என்று கமலக்கண்னனை நோக்கித் கூறினார் பிரகாஷ் பப்ளிஸிட்டி அதிபர்.

“அது சரிதான்! ஆனா மனுஷன் நெறையப் படிச்சிருக்கார். ஆனானப்பட்ட ஆளுங்கள்ளாம் இவர் திறமையைப் புகழ்ந்து எழுதியிருக்கானே! சரக்கு இல்லாம அப்பிடி எழுதுவானா?” என்று இதற்கும் விட்டுக்கொடுக்காமல் பதில் கூறினார் கமலக்கண்ணன்.

“சரக்கு இருக்கலாம் சார் ஆனால் இன்னிக்கி எந்தச் சரக்கானாலும், அதை ஜனங்க விரும்பற சரக்கா மாத்திக்கணும். இல்லாட்டா–சாக வேண்டியதுதான்...”

“சரி அது எப்படியும் போகட்டும்! நமக்கு வேண்டாம் அவர் கவலை. இப்ப நீங்க வந்த காரியத்தைக் கவனியுங்க...” என்றார் கமலக்கண்ணன்.

“நம்ம காரியம் ரெண்டு நிமிஷத்திலே முடிஞ்சிடும். உங்க பேட்டியை நீங்க எப்படி எப்படி விரும்புவீங்களோ அப்பிடி நானே எழுதிகிட்டு வந்திட்டேன். இந்தாங்க! சும்மா ஒருதரம் புரட்டிப்பார்த்து விட்டுக்கீழே கையெழுத்துப் போட்டுக் கொடுத்திடுங்க. படம் மட்டும் புடிச்சிக்கணும்...” என்று தொடங்கிய கலைச்செழியனை இடைமறித்து “அதெப்படி? நீங்களே எழுதிட்டு வரமுடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/78&oldid=1047787" இலிருந்து மீள்விக்கப்பட்டது