இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இவ்வாறே இராமாயணத்துக்கும் சில உரைநடைத் தொகுதிகள் வந்துள்ளன. இவ்வாறு வைணவ சமயமும் சென்ற நூற்றண்டில் உரைநடையை வளர்த்தது எனலாம்.
சமணம்
சென்ற நூற்றாண்டில் சமண சமயம் பற்றி உரைநடை இலக்கியம் அதிகமாக இல்லை. பெளத்த சமயம் பற்றியும் சில நூல்களே வெளிவந்துள்ளன. முன்னரே உள்ள பாடல்களுக்கு விளக்கமேயென அமைந்துள்ளனவன்றி வேறு பெரும் உரைநடை நூல்கள் எழுதப்பெறவில்லை. அவ்வாறு வந்துள்ள இரண்டொன்றும் மணிப்பிரவாள நடையோ என்னுமாறு அமைந்த நிலையையே காண முடிகின்றது.
ஜீவலம்போதனை என்ற நூலுக்குச் சென்ற நூற்றாண்டில் (1899) அச்சான ஒர் உரையை இங்கே காணலாம். பாட்டு எளிய தமிழ் நடையில் உள்ளது.
பாட்டு;
ஒர்ந்துயிரே கேளுங்க ணிற்ப நிலையாத
வார்ந்தறிவு காண்பனவே யார்ந்தநிலை-சேர்ந்த
வினையிஞ லாமுடலு மேவுமனை மக்கள்
கினையுங்கா னில்லாவா னேர்ந்து (336).