இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
௳
சிவமயம்.
பெண்விலைக் கண்டனச்
செய்யுட்கள்
காப்பு
மண்வரையு மிக்கபுகழ் மேவு தனவணிகர்
பண்விலையின் கண்டனத்தைப் பேசவே - பண்ணுமையாள்
மந்த!திரு மான்மருக! வள்ளிகண வன்றமைய!
நந்திமுக நின்றாள் சரண்.
(இவை ௧௦ செய்யுட்களும்,
பெண் விற்பாரை நோக்கிக் கூறியன.)
இருந்தனங்கள் மிகப்படைத்தோர் எத்தனைபேர்
இவ்வுலகில் இருந்தார்; இன்றி
வருந்திவரு வோர்க்குநிதி மாறாது
மாரியென வழங்கும் வள்ளற்
பெருந்தகைமை மிக்கார்கள் எத்தனையோ
பேரிருந்தார்; பிச்சை கேட்க
அருந்தரளம் அளிக்கொடுத்த ஆயிழைபோன்
றாருண்டோ? அறைகு வீரே. (௧)