20
காமன் சிவனை எதிர்த்து
நாசம் ஆயினான், அதற்கு
இது ஒரு அடையாளக் கொடி ;
தீபாவளிப் பரிசு ; சூப்பர் குலுக்கல் :
நரகாசுரனுக்கு விழா எடுத்தனர்,
காம உணர்வு வாழ்வின் துாண்டுதல்
அதுதான் காதலாகப் பரிணமிக்கிறது ;
இரண்டு துருவங்களை ஒன்று சேர்க்கிறது :
இன்ப வாழ்வை அமைத்துக் கொடுக்கிறது.
அதுவே கட்டுக்குள் அடங்காவிட்டால்
சிறைக் கூட்டுக்குள் தள்ளி விடுகிறது ;
குற்றங்களுக்கு இது தாயகம் ;
அதன் தலைவனைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
இவனைக் கண்டு ஏன் அஞ்சுகிறார்கள் ?
அருணகிரியார்கள் அவர்கள் ;
அகலுகிறார்கள் ஆன்மீக வாதிகள்,
அந்த இளம் பிஞ்சுகள்
உள்ளம் இந்தக் கதைகளைக்
கேட்டு வியந்தது ; முதியவர்களின்
மன இயல் அறிந்தது.
இதைப்போல் ஒவ்வொரு
குடியிருப்புக்கும் ஏதோ
ஒரு பின்கதை
இருந்தது ; அது கேட்பதற்குச்
செவி விருந்தாக அமைந்தது.