உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பாண்டவர்களுள் இளையவன் வீரன் அருச்சுனன்; அவனுக்கே அவளைத் துருபதன் மணம் முடிக்கக் கருதினான். இந்தப் பாண்டவர்கள் என்ன ஆனார்கள்? அரக்கு மாளிகையில் உருக்கி எரிந்த கரித்துண்டுகள் ஆயினரா? தப்பித்து வெளியேறினரா? இரண்டுசெய்திகள் ஒலிபரப்பப் பட்டன; இடும்பன் இறந்தான் பகன் மறைந்தான் இடிபோன்ற செய்திகள். அவர்களை எதிர்த்துப் போரிட வல்லவர் உலகில் யாருமே இல்லை. உலகப் புகழ் பெற்ற மல்வீரர்கள் இவர்கள்; இவர்களை வீமன்தான் கொன்று இருக்க வேண்டும்; உள் மனம் துருபதனுக்கு அதனை அறிவுறுத்தியது: