இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தலைகொடுத்தல் பெரிதென்பர் உலகத்தோர்
ஒன்றல்ல; தங்கள் எட்டுத்
தலைகொடுத்த தக்கபுகழ்த் தனவணிகர்
குலத்துதித்துந் தையல் தன்னை
விலைகொடுத்துக் கொள்வோர்க்கு விற்றுமனஞ்
சற்றுமிரங் காமல் ஐயோ!
குலங்கெடுக்க வந்ததொரு கோடரிக்காம் -
பாகின்றீர்; கொடுமை யீதால். (௫)
தழைத்தகுலத் தொடுமாண்ட தனவணிகர்
குலத்துதித்துந் தரணி மீது
பிழைக்கவழி யறியாது பெண்மகவை
விற்றுண்ணும் பேடி காள்கல்
ஒழுக்கமுயர் குணமறிவும் உடையோர்கள்
உமைக்கான ஒருப் படாரே. (௬)
திருமலியக் காவிரிப்பூம் பட்டினத்தில்
இனிதுறையுஞ் செய்தி கேட்டுத்
தருமநெறி தவிராது மதுரைநகர்
தனையாண்ட தமிழர் கோமான்
பெருமைபெற இனிதழைக்கப் பெரும்பாண்டி
வளநாடு பெற்ற எங்கள்
தருமகுலங் தனில்வந்தும் தையலைவிற்
றுயிர்வாழ்தல் தகவோ சாற்றீர். (௭)