பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

திருவிளையாடற்புராணம்


பயன்படாத அம்மேங்களை விடுவதில்லை என்று உறுதியாக இருந்தான்; மழை தருவதாக வாக்குறுதி தந்தால் அவற்றை விடுவிப்பதாகக் கூறினான். தேவர் தலைவனுக்குப் பிணையாக வார்த்தை தவறாத வேளாளன் ஒருவன் குறுக்கே நின்றான்; தாம் மழை தராவிட்டால் தக்க தண்டனை அடைவதாக இந்திரன் உறுதி தந்ததால் மேகங்களை அவிழ்த்துவிட்டான்; அவை மழையைக் கவிழ்த்துக் கொட்டின. அதுமுதல் மாதம் மும்மாரி பெய்து நாடு வளம் பெற அவை செய்தன. 

15. மேருவைச் செண்டால் அடித்த படலம்

அகத்திய முனிவர் அறிவித்தபடி திங்கள் நாள் விரதத்தை விடாமல் தொடர்ந்து அனுஷ்டித்து வந்தமையால் மங்காத செல்வம் பெற்று உக்கிர பாண்டியன் வாழ்ந்து வந்தான்; காந்திமதியின் காதல் வாழ்க்கையில் வீரபாண்டியன் என்ற நன்மகனைப் பெற்றான். அவன் வளர்பிறை போல வளர்ந்து கலைகள் பலவும் கற்றுப் பூரண நிலவு போல முகப்பொலிவோடு விளங்கினான். இவ்வாறு வாழும் நாளில் நிலை திரிந்து பருவ மழை பெய்யாது நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது; கோள்கள் சூரியனை நோக்கி நிற்பதால் ஓர் ஆண்டுக்கு மழை பெய்யாது என்று சோதிடர்கள் தாள்கள் கொண்டு அவனுக்கு அறிவித்து வேதனை உண்டாக்கினர்.

சோதனை தந்த வேதத் தலைவனைத் தன் ஏதங்களை நீக்குமாறு வேண்டினான். காது கொடுத்துக் கேட்ட கடவுள் அவன் கண்குளிரச் சித்தராய்க் கனவில் வந்து விரும்பியதைப் பெற வழி காட்டினார்.

மழை வளம் குறைந்ததால் தானியங்கள் அருகி விட்டன; பொன்னையும் மணிகளையும் உயர் பண்டங்-