பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13


இன்னொரு கேள்வி

தீயணுகல் முதலிய துன்பமும், நோயும், மக்களை மக்கள் நலிக்கும் துன்பமும், இல்லாமல் ஒழியுமாயின் அவ்வுலகம் இன்ப உலகமா? நுணுகி ஆராயின், அது இன்ப உலகமாயிராது என்பது புலப்படும். ஏனெனில், மேற்சொன்ன துன்பங்கள் எதுவுமில்லாதபோது அங்கு நுகரப்படும் உண்ணல், உறங்கல் என்னும் நிலையைவிட மேலான நிலையை அவ்வுலகம் வேண்டி நிற்கும் ஆதலால் இன்பம் என்றுகூறிய அந்நிலையே துன்பமாகக் கருதப்படும்.

இன்பம் என்பது இவ்வளவு என்னும் எல்லை. குறிக்க முடியாது. துன்பமே, அடுத்து நுகரப்படும் இன்பத்திற்கு அளவுகாட்டி நிற்கிறது,

இன்பம் எப்போது கிடைக்கும்? துன்பத்தின் இறுதியில் கிடைக்கும். எதிலிருந்து இன்பம் கிடைக்கும்?

துன்பத்தின் பயன் இன்பம் என்று முழக்கஞ் செய்த தூங்கும் உலகிற்கு! தொண்டு துன்பம். அதன் விளைவு இன்பம், முயற்சி துன்பம். அதன் விளைவு இன்பம். சூல் தாங்கல் துன்பம் மகப்பேறு இன்பம், வித்திடுவது துன்பம் அறுப்பது இன்பம். குற்றுவது துன்பம் அரிசிகாணல் இன்பம், ஆக்குவது துன்பம் அருந்துவது இன்பம்.