விடுதலை என்னும் தலைப்பில் வேண்டுமடி எப்போதும் விடுதலை அம்மா என்று பாடுகிறார்.
மனதில் உறுதி வேண்டும் என்னும் தலைப்பில்,
‘மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்ல வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்’ என்று பாடுகிறார்.
“கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும் உண்மை வென்றிட வேண்டும்
ஓம் ஓம்’ என்று பாடுகிறார்.
‘பக்தி என்னும் தலைப்பில்
“ஆசையைக் கொல்வோம்
சோர்வுகள் போகும்
கல்வி வளரும்
சோம்பல் அழியும்
சந்ததி வாழும்’
என்று தத்துவ ஞானம் கூறிப்பாடுகிறார்.
“பகைவனுக்கருள்வாய் என்னும் தலைப்பில் மிகவும் அருமையான தத்துவ ஞானம் நிரம்பிய பாடலைப் பாடுகிறார்.
பலவகைப் பாடல்கள்
1. புதிய ஆத்திச்சூடி புதிய ஆத்திச்சூடி என்னும் பெயரில் அச்சம் தவிர் என்று தொடங்கி
வேதம் புதுமை செய்,
வையத்தலைமை கொள்
வெளவுதல் நீக்கு என்று முடித்து 110 பாக்கள் பாரதி எழுதியுள்ளார். இந்த
20