இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6
மேற்றிசையில் செங்கிறத்தைக் கதிரோன் பாய்ச்சும்
- வேளையிலே அவ்வொளியை ஆறு தன்மேல்
ஏற்றுனது மெய்வண்ணம் காட்டி, ஒவ்வோர்
- இடங்களிலே நெளிந்தோடி இடையைக் காட்டி,
காற்றுநிறை வயல்களுக்குப் பிரிந்து சென்று
- நாள்வருவாய்க் கால்காட்டி, ஒடை மீது
காற்று ரசச் சலசலவென் ருேடுங் காலே
- களிநடஞ்செய் காற்சதங்கை ஒலியைக் காட்டி
7
கரையோரம் அலேக்கையால் வாரி விட்ட
- கருமணலால் சுருள் கூந்தல் காட்டி, வெள்ளை
நுரைசேரும் புனல்தள்ளும் சங்கி னத்தின்
- நுண்சினையால் பல்காட்டி, ஒடி ஒடி
இரைதேடும் கயல்மீனல் கண்கள் காட்டி,
- இறுமாந்து செல்லுங்கால் தன்பால் செந்தா
மரையின்றி முகங்காட்ட முடியா ஆறு
- மாய்வதற்குக் கடல்நோக்கி ஓடு தல்பார் !
8
ஊர்மக்கள் வெறுத்தொதுக்கும் கழிநீர் எல்லாம் .
- ஓடிவந்து கலந்தாலும் மாசு நீங்கி
ஊர்விட்டு நீங்குகையில் தாய்மை யாகி
- ஊர்ந்துசெலும் ஆறுகண்டு தமிழைக் காண்பாய்!
சார்பற்றுத் தனித்தியங்க வல்ல என்றன்
- தமிழ்மொழியில் பிறமொழிகள் கலந்த போதும்
நேர்வுற்று மாசின்றி இயங்கும் பண்பை -
- கினேப்பூட்டும் ஆற்றுக்கு வாழ்த்துக் கூறு.!
41