இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சென்றிடும் இடத்தில் எல்லாம்
சிறுவர்க்குச் சங்கம் காண்பான்; நன்றறி சிறுவர் சூழ
நடுவினில் அமர்ந்து பேசி மன்றினில் மகிழ்தல் ஒன்றே
வாழ்க்கையின் பயனாக் கொண்டான் வென்றிகள் பலவும் பெற்றான்
விழையுமென் நட்பும் பெற்றான்.
மழலையர் தெரிந்து கொண்டு = மனத்தினிற் பதித்துப் பாடிப்
பழகிடப் பாடல் தந்தான்;
பச்சிளங் குழந்தை நெஞ்சில் அழகிய பாட்டு ணர்ச்சி
அரும்பிட வேண்டும் என்ற விழைவுடன் ஈடு பட்டான்
வியத்தகு குறிக்கோள் கொண்டான்.
குழந்தைகள் பாடல் பாடக்
குழந்தையின் உள்ளம் வேண்டும் பழந்தமிழ் உணர்வு வேண்டும்;
பண்புறும் நெஞ்சும் வேண்டும்; வழங்கிடும் பண்பு வேண்டும்
வாய்மையோ டெளிமை வேண்டும் மொழிந்திடும் அனைத்துங் கொண்டான்
முனைப்பிலா வள்ளி யப்பன்.