பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்றிடும் இடத்தில் எல்லாம்

சிறுவர்க்குச் சங்கம் காண்பான்; நன்றறி சிறுவர் சூழ

நடுவினில் அமர்ந்து பேசி மன்றினில் மகிழ்தல் ஒன்றே

வாழ்க்கையின் பயனாக் கொண்டான் வென்றிகள் பலவும் பெற்றான்

விழையுமென் நட்பும் பெற்றான்.

மழலையர் தெரிந்து கொண்டு = மனத்தினிற் பதித்துப் பாடிப்

பழகிடப் பாடல் தந்தான்;

பச்சிளங் குழந்தை நெஞ்சில் அழகிய பாட்டு ணர்ச்சி

அரும்பிட வேண்டும் என்ற விழைவுடன் ஈடு பட்டான்

வியத்தகு குறிக்கோள் கொண்டான்.

குழந்தைகள் பாடல் பாடக்

குழந்தையின் உள்ளம் வேண்டும் பழந்தமிழ் உணர்வு வேண்டும்;

பண்புறும் நெஞ்சும் வேண்டும்; வழங்கிடும் பண்பு வேண்டும்

வாய்மையோ டெளிமை வேண்டும் மொழிந்திடும் அனைத்துங் கொண்டான்

முனைப்பிலா வள்ளி யப்பன்.