பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

21–3–1981

வஞ்சனை அறிய மாட்டான்

வாய்மையில் நழுவ மாட்டான் பஞ்சினும் மென்மை நெஞ்சன்

பழகிட இனிய நண்பன் அஞ்சிடும் தீமை காணின்

அவ்விடம் விலகி நிற்பான் பிஞ்சிளங் குழந்தை காணின்

பேணுவான் தெய்வ மென்றே

ஆர்ப்பரிப் பொன்று மில்லான்

அடக்கமே என்றுங் கொள்வான்

சேர்த்திடும் நண்ப ரெல்லாம்

சிறுவர்தம் வாழ்வில் அன்பு

வார்த்திட வழிகள் சொல்லி

== வளர்த்திடும் நாட்டங் கொண்டான்

கூர்த்தநல் மதியில் நெஞ்சில்

குழந்தைகள் நினைவே கொள்வான்.