இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
21–3–1981
வஞ்சனை அறிய மாட்டான்
வாய்மையில் நழுவ மாட்டான் பஞ்சினும் மென்மை நெஞ்சன்
பழகிட இனிய நண்பன் அஞ்சிடும் தீமை காணின்
அவ்விடம் விலகி நிற்பான் பிஞ்சிளங் குழந்தை காணின்
பேணுவான் தெய்வ மென்றே
ஆர்ப்பரிப் பொன்று மில்லான்
அடக்கமே என்றுங் கொள்வான்
சேர்த்திடும் நண்ப ரெல்லாம்
சிறுவர்தம் வாழ்வில் அன்பு
வார்த்திட வழிகள் சொல்லி
== வளர்த்திடும் நாட்டங் கொண்டான்
கூர்த்தநல் மதியில் நெஞ்சில்
குழந்தைகள் நினைவே கொள்வான்.