உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/தியாகம்
50. தியாகம்
மனிதன் இறப்பதற்குத் தகுந்த இடம் மனிதனுக்காக இறக்குமிடமே.
முள் தைக்கா வண்ணம் ரோஜா பறிப்பது எப்படி?
நெருப்பு வழிச் செல்பவன் புகைக்கு அஞ்ச மாட்டான்.
திராட்சைக் கொடி கனி தருவதாக எண்ணாமல் கனி தந்துகொண்டிருப்பதுபோல், தியாகம் செய்வதாக எண்ணாமல் தியாகம் செய்வதே மனிதனுடைய உண்மையான இயல்பாகும்.
தன்னைப் பிறர்க்காகத் தியாகம் செய்தல் சகல சமயங்களுக்கும் அழியாத அஸ்திவாரம்- அது ஒன்றே சாஸ்வதமான உண்மையறம்.
உங்களில் தலைவனாக இருக்க விரும்புபவன் உங்களுக்கு ஊழியனாக இருக்கக் கடவன்.
இலட்சியம் சீக்கிரமாகப் பழுத்துப் பயன் தருவது, தியாகம் செய்வோருடைய இரத்தம் பாய்ந்து போஷிக்கப்படும் பொழுதுதான்.
தன்னை ஒடுக்கும் தியாகம்- இதுவே இறைவன் மனிதனுக்கு அருளியுள்ள தலை சிறந்த ஞானமாகும்.
பெரிய விஷயங்களில் தியாகம் செய்தல் எளிது, சிறிய விஷயங்களில் தியாகம் செய்வதே கடினமாகும்.
★ ★ ★