பக்கம்:இராவண காவியம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. ஈங்கிவ ராக வாய்மைக் கிருப்பிட மாகச் செங்கோல் தாங்கியே தரிழ கத்தைத் தணிக்குடை நிழற்கீழ்த் தங்கத் தீங்கறி பாது மக்கள் செந்தமி ழின்பம் துய்க்கப் பாங்குடன் புரக்கு மண்ணல் பண்பினை யினிது காண்பாம். 33. மலையிடைத் தனியாக் கண்டு வண்டமிழ்க் காதல் கொண்டு நிலவிய காட்சி தந்து நெஞ்சினைக் கவர்ந்து சென்ற தலைவியின் தந்தை சிந்தை ததும்பிய முடங்கல் கண்டு விலையிலாப் பொருளைப் பெற்ற வெறியன்போ லுவகை பூத்தான். 34, பூத்தவன் காத லென்னும் பொருளினைத் தந்து தன் னைக் காத்தவள் தன் னை நேரிற் கண்டதே போல வந்த மூத்தவன் செங்கை தந்த முடங்கலை முத்த மிட்டே பாத்தனைப் பயீலு முள்ளம் பண்படப் பதித்துக் கொண்டான். 35. கொண்டவன் மதிவ லோரைக் கூவியே மகளின் வாழ்க்கை கண்டவன் முடங்கல் காட்டிக் கருத்தையு முரைக்க வன் னார் தண்ட மி ழிறைவா வாழ்க தாழ்க்கிலேம் பயண மீதோ கொண்டன மெனவெல் லோர்க்குங் கூ றின ரவரு மார்த்தார். 36. மின்னியல் மதியந்தன் னை வெண் முகில் மறைத்தல் போலப் பொன்னினு மணியி னாலும் பூவினும் பொன் பட்டாலும் இன்னிய லொளிமை வாய்ந்த வெழினல வுருவை மூடி மன்னுயிர்த் தந்தை தன்னை மணமக னாக்கி னார்கள். 33. வெறியன் - வறியவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/166&oldid=987677" இலிருந்து மீள்விக்கப்பட்டது