அறிவுக் கனிகள்/இன்சொல்

விக்கிமூலம் இலிருந்து

31. இன்சொல்

530.இன்சொல் வழங்குவதால் நாக்கு காயமுறுவதில்லை.

ஹேவுட்

531.இன்சொற்களின் விலை அற்பம், ஆனால் அதன் மதிப்போ அதிகம்.

ஹெர்பர்ட்

532.பானை கீறலா அன்றா? ஒலியால் அறியலாம். அறிவாளியா, அறிவிலியா? பேச்சால் அறியலாம்,

டெமாஸ்தனீஸ்

533.ரூபன்ஸ் என்னும் ஓவியன் ஒரு கோடு கிழித்தால் போதும், அழும்முகம் நகைமுகம் ஆகிவிடும். அதுபோல் நாமும் செய்ய முடியும், நமக்கு ஒரு மொழி போதும்.

ஆவ்பரி

534. ஜனங்கள் இறந்தோரைப் பேசுவது போலவே இருப்போரையும் பேசுவார்களானால் எவ்வளவு நன்மையாய் இருக்கும்?

ஆவ்பரி

535.மொழிகள் மண்ணுலகின் புத்திரிகள்; செயல்கள் விண்ணுலகின் புத்திரர்கள்.

ஜாண்சன்

536.எண்ணங்களுக்கு மொழிகள் எப்படியோ அப்படியே நற்குணத்துக்கு உபசாரம்.

ஜூபர்ட்

537.இருட்டறையில் மின்மினி வந்தால் எப்படி அறையில் இருளை மறந்து பூச்சியின் அழகைப் பருகுகிறோமோ, அப்படியே நமக்குத் துன்பம் வந்த சமயம் யாரேனும் இனிய மொழி பகர்ந்தால் நம் துன்பங்களை மறந்து அந்த மொழியின் இனிமையை உணர்கின்றோம்.

ஆர்தர் ஹெல்ப்ஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்_கனிகள்/இன்சொல்&oldid=1000045" இலிருந்து மீள்விக்கப்பட்டது