அறிவுக் கனிகள்/சொல்
538.சூரிய கிரணங்கள் போன்றவையே சொற்கள்; அதிகமாக ஒருமுகப்பட்டால் அக்கினியாய்ச் சுடும்.
539.நன்றாய்ப் பேசும் ஆற்றல் இன்மையும், நாவை அடக்கும் ஆற்றல் இன்மையும் பெரிய துர் அதிர்ஷ்டங்களாகும்
540.சபையில் பேசாத காரணம் என்ன? முட்டாளாய் இருப்பதா, மொழிகள் கிடைக்கவில்லையா?—முட்டாள் ஒருநாளும் நாவை அடக்க முடியாது.
541. பேச வேண்டிய காலம் அறியாதவன் பேச வேண்டாத காலமும் அறியான்.
542.மனிதனுக்கு மட்டுமே பேசும்சக்தி உளது; அதன் முதல் உபயோகமும் இறுதி உபயோகமும் கேள்விகள் கேட்பதே.
543.இந்த வாக்கியத்தின் பின்னால் ஒரு மனிதன் உள்ளனரா. இல்லையா? இது ஒரு ஆன்மாவைப் பிரதிபலிக்கின்றதா, இல்லையா? இதைப் பொறுத்ததே அதன் ஆற்றல்.
544.மொழிகள் இலைகளை ஒக்கும்; தழை நிறைந்த மரத்தில் சத்துள்ள பழங்கள் இரா.
545.நன் மொழி கூறலும், ஒருவித நற்செயலே; ஆயினும் மொழிகள் செயல்கள் ஆகா.
546.மொழிகள் என்பவை அறிவு உபயோகிக்கும் நாணயங்களே யாகும். சர்க்காரிடம் பொருளில்லை யெனில் நாணயங்கள் செலாவணியாகா; அதுபோல் பொருளில்லாத மொழிகளும் பயன்படா.
547.மொழிகள் சாதனமேயன்றி லட்சியமன்று. கருத்தைக் கூறுவதே நம் நோக்கம். அதற்குரிய ஆயுதமே பாஷை,
548.நாவன்மை என்பது ஆன்மாவின் இடையீடில்லாத இயக்கமே யாகும். அலங்காரமாய்ப் பேசுவோர் நாவலர் அல்லர். பல சொல் அடுக்கிப் பாமரரை மயக்கப் பழக்கப் படுத்தப்பட்ட நாவினரேயாவர்.
549.கருத்து பழையதாயு மிருக்கலாம். பலர் கூறியதாயுமிருக்கலாம். ஆயினும் அது உயர்ந்த முறையில் அழகாய்க் கூறுபவனுக்கே உரியதாகும்.
550.நமக்கு ஆண்டவன் நா அளித்திருப்பது இன்சொல் இயம்புவதற்கே.
551.சிலேடை உபயோகிப்பவர் இருப்புப் பாதையில் கற்களை வைத்து மகிழும் விஷமச் சிறுவர்களை ஒப்பர்.
552.வீண்சொற்கள் விஷயங்களை வியர்ந்த மாக்குகின்றன.