அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/புரட்சியால் பெற்ற பதவி

விக்கிமூலம் இலிருந்து

(25) புரட்சியால் பெற்ற தவி



அயர்லாந்து நாட்டிலே 1848ம் ஆண்டில், பெரும் புரட்சி செய்த இளைஞர்கள் மீது ராஜத்துரோக வழக்கு நடைபெற்றது.

அவர்கள் ஒன்பது இளைஞர்கள், அவர்களின் தலைவனின் பெயர் சார்லஸ் டபி.

அந்த ஒன்பது பேர்களுடைய வழக்கை விசாரணை செய்த நீதிபதி, தண்டனை அளிப்பதற்கு முன், குற்றவாளிகளைப் பார்த்து, “நீங்கள் ஏதாவது சொல்லிக் கொள்ள விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்.

அவர்களில் ஒருவர், “நீதிபதி அவர்களே! இதுவே எங்களுடைய முதல் குற்றம். அடுத்த தடவை இதை விடக் கொஞ்சம் மேலாகவே நடந்து கொள்ளுகிறோம். நிச்சயமாகச் சொல்லுகிறோம், இன்னொரு முறை குற்றம் புரியும்போது பிடிபடாமல் தப்பி விடுவோம்” என்று கூறினான்.

அவனுடைய பேச்சில் காணப்பட்ட திமிரானது நீதிபதியைச் சினம் கொள்ளச் செய்தது. ஆத்திரம் அடைந்த நீதிபதி அந்த ஒன்பது இளுைஞர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்தார்.

தீர்ப்பைக் கண்டு உலகம் முழுதும் கண்டனம் எழுந்தது. கொடுரமான தண்டனை என்ற கூக்குரல் எங்கும் கிளம்பியது.

அப்பொழுது, ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணி மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றினார்.

அந்த ஒன்பது பேர்களையும் காட்டுமிராண்டிகள் நிறைந்த ஒரு தீவுக்கு அனுப்பி வைத்தார்கள்.

பதினைந்து ஆண்டுகளுக்குப்பிறகு, விக்டோரியா ராணி ஆட்சிக்காலத்திலேயே, அந்த ஒன்பது பேர்களின் தலைவரான சார்லஸ் டபி தேர்தலில் வெற்றி பெற்று, அதே அயர்லாந்து நாட்டிற்கு முதல் அமைச்சர் ஆகிவிட்டார்.

அதை அறிந்து ஆச்சரியம் அடைந்த விக்டோரியா ராணி, “மற்றவர்கள் என்ன ஆனார்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு முதல் அமைச்சரான சார்லஸ் டபி அளித்த பதில்.

ஒருவர் கவர்னர்; இரண்டு பேர் ராணுவத் தளபதிகள்; இன்னொருவர் கவர்னர் ஜெனரல்; மற்றொருவர் அட்டர்னி ஜெனரல்; வேறெருவர் சபைத் தலைவர்; மீதி இருவரில் ஒருவர் நகர மேயர்; இன்னொவர் பிரபல அரசியல்வாதி.”

புரட்சிக்காரர்களுக்குத் தண்டனையும் காத்திருக்கிறது; பதவியும் தயாராக இருக்கிறது. வரலற்றில் கண்ட உண்மை!