அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/புத்திசாலி நடிகர்

விக்கிமூலம் இலிருந்து


(96) புத்திசாலி டிகர்



ரோகர்ஸ் என்னும் நடிகர் நடிப்பதற்காக, கிராய் என்னும் கதாசிரியரைக் கதை எழுத ஏற்பாடு செய்திருந்தனர், படத் தயாரிப்பாளர்.

ஆசிரியர் கிராயிடம் வந்து "நான் நடிப்பதற்காக அருமையான கதை ஒன்றை நீங்கள் எழுதி வைத்திருக்கிறீர்களாமே; எங்கே அந்தக் கதை?” என்று கேட்டார் நடிகர் ரோகர்ஸ்.

சிறு துண்டுக் காகிதம் ஒன்றை அவர் முன் போட்டார் கதாசிரியர்.

நடிகர் அதைப் பார்த்துப் புன்முறுவலோடு, “சரி, நான் இதில் நடிக்கத் தயார்!” என்றார்.

ரோகர்ஸ் நடித்தது அதுவே முதல் படம்!

பின்னர், அவர் நடித்த படங்கள் அனைத்துக்கும் கிராயே கதை எழுதினார்.

முதன் முதலில் துண்டுக் காகிதத்தில் கிராய் என்ன எழுதிக் காண்பித்தார் நடிகர் ரோகர்ஸிடம்?

"பஞ்சத்திலே பணத்தை இழந்தான் பைச்பீட்டர்ஸ்; நிலைமைக்கு ஏற்றபடி, தன் வாழ்க்கையைத் திருத்திக் கொண்டான்” என்று குறிப்பிட்டிருந்தார் கதாசிரியர் கிராய்.