அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/புத்தகம் எழுதத் தகுதி

விக்கிமூலம் இலிருந்து

(97) புத்தகம் ழுதத் குதி



தான் எழுத்தாளராகி, புத்தகம் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டான் இளைஞன் ஒருவன்.

மிகவும் உற்சாகத்தோடு, புகழ்பெற்ற பத்திரிகை அதிபர் நார்த் கிளிப்பிடம் சென்று, -

"ஆரம்ப நூலாசிரியனுக்கு வேண்டிய முக்கியமான தகுதி என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான்.

அவர் மிகவும் அமைதியாக,

"கொஞ்சம் பசி வேண்டும்!" என்றார்