அண்ணா சில நினைவுகள்/நான் பாடிய பாடல்

விக்கிமூலம் இலிருந்து
நான் பாடிய பாடல்

மூன்றாவது திராவிட மாணவர் பயிற்சிப் பாசறையை ஈரோட்டில் நடத்தி முடித்த நோம். பெரியார் ஏற்காட்டில் தங்கச் சென்றுவிட்டார். நான் ஈரோட்டில் குடி அரசு அலுவலகத்தில் இருக்கிறேன். அண்ணா வந்தால் சண்டை போடவேண்டும் என்று, துணையாசிரியர் மாணிக்கவாசகத்திடம் சொல்விக் கொண்டிருக்கிறேன். இவர் என்னிடம் கேட்டு, திருச்சி திராவிடமணி’ பத்திரி கைக்கு, அதன் ஆசிரியர் T. M. முத்து விரும்பியதாக, என் கவிதை ஒன்று வாங்கி அனுப்பினார். அதிலிருந்து முதல் இரண்டு பாடல்களை எடுத்து, யாரோ பி. முனுசாமி என்பார், “திராவிடநாடு” இதழுக்கு அனுப்பி, அது ‘திராவிடரின் சபதம்’ என்ற தலைப்பில் 15.4.1945 இதழின் முதல் பக்கத்தில் பிரசுரமாகியிருக்கிறது. இப்படியா எழுத்தைத் திருடுவார்கள்?

அண்ணா வந்தபொழுது படபடவென ஆரம்பித்தேன். அவர் நிதானமாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, “எங்கே சொல்லுய்யா கேட்போம். உன் பாட்டாயிருந்தா, இப்ப பாக்காமெ சொல்,” என்று என்னைச் சீண்டினார்.

பொறுத்திருந்த காலமெல்லாம் போதும்; இன்று
புவியெங்கும் கமையறியப் பொங்கிச் செல்வோம்!
வெறுத்தொதுக்க வேண்டிய வீண் நூற்களையும்,
வேறுபடும் மக்களையும் விலக்கித் தள்ளி
அறுத்தெறிந்து தளைகளெல்லாம் அகன்று நீங்க
ஆண்மையுடன் பொருதெழுந்து நமது தொண்டை
மறுத்தெதிர்க்கும் மதியிலிகள் மயங்கும் வண்ணம்
மானமுடன் வாழ்வதற்கே வழிகள் செய்வோம் ......

இதைச் சொல்லிவிட்டு “அடுத்ததைச் சொல்லட்டுமா? இன்னும் ஏழெட்டு Stanza இருக்குது அண்ணா!” என்றேன். “வேண்டாம், ஒன்னெ நம்பறேன். ஏதோ தவறு நடந்துபோச்சு. பரவாயில்லய்யா ஒன் கருத்து இன்னொருத்தர் மூலமாவும் பரவுறது நல்லதில்லியா?” என்றார்-மேலும் தொடர்ந்தார் அண்ணா. முன்னே கூடச் சொன்னியே-திராவிட நாட்டுலே நீ எழுதிய ஒரு பாட்டை, யாரோ நம்ம அய்யா பேசிய கூட்டத்திலே, மேடையிலே பாடினாங்கண்ணு,”

“ஆமாண்ணா, இங்கேதான் பொத்தனூர்லெ பாடினாங்க!”

“சரி. அங்கே அவரு, இந்தப் பாட்டை எழுதினது இன்னார்; அது இன்ன பத்திரிகையிலே வந்தது அப்படின்னு (announce) அன்னவுன்ஸ் பண்ணிட்டா பாடுனார்?”

“ஒண்ணுமே சொல்லலியே எழுதின எனக்கு மட்டும் கேட்கச் சந்தோஷமாயிருந்தது!”

“இருந்ததா? அப்ப அதை அனுமதிச்ச நீ, இப்ப இது மட்டும் எழுத்துத் திருட்டுன்னு ஏன் பதைக்கிறே? சரி, போகட்டும் விடு. அது என்ன பாட்டு, கொஞ்சம் சொல்லேன். பாட முடிஞ்சாலும் பாடு, கேட்கலாம்.”

“ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க அண்ணா, ஒங்க லாஜிக்கை ஒத்துக்கறேன்! இதான் அந்தப் பாட்டு, போன ஆண்டு எழுதியது!”

இந்தத் திராவிடம் என்னுடைய நாடு
என்று தினக்தொறும் கீயிதைப் பாடு
முந்தித் திராவிடர் முறையுடன் ஆண்டார்;
மூடத்தனத்தாலே முழுமோசம் பூண்டார்!
வந்து புகுந்திட்ட மறையோரை நம்பி!
வகையின்றி வாடினது இனிப்போதும் தம்பி!
சொந்தத் தமிழரின் சுதந்திரம் நீங்க,
சூழ்ச்சிகள் செய்தோரைச் சூறைசெய் ஏங்க!

இது நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையோட பாடலுக்கு ள்திர்க்கருத்து. அவர் ‘இந்திய நாடு’ என்னுடைய நாடு: என்று பாடியிருந்தார். இதேபோல, ‘சூரியன் வருவது யாராலே’ என்று தொடங்கும் பாடல் ஒன்று அவருடையது.

அதை மாற்றி நான் எழுதினேன் :-

சூத்திரன் ஆனது யாராலே
சுதந்திரம் போனது எவராலே?
சாத்திரம் வேதம் இதிகாசம்
சமயநூல் புராணம் இவையேது
தோத்திரம் குலம்மதம் சாதியென்றே
கூட்டம்பிரித்தது யார்வேலை?
ஆத்திரம் இன்றி அடிமைசெய்தே
ஆட்சி புரிபவர் யாரிங்கே?!!

இதையும் அண்ணா கேட்டார்கள். “நீ அப்பப்ப கொஞ்சம் இதுமாதிரி இசைப்பாடலும் எழுதலாமய்யா” என்று சொல்லிப் புறப்பட்டார்கள்.

கலைஞர் கல்லக்குடிப் போராட்டத்திற்குப் புறப்படு முன் ஒருநாள், சேலத்தில் கோயம்புத்ததூர் லாட்ஜில், அவரோடு கே.ஆர். செல்லமுத்துவும், நானும் தங்கியிருந்தோம். அப்போது சென்னையிலிருந்து புரட்சி நடிகர் எம். ஜி. ஆர். வந்து கலைஞரைப் பார்த்து, தான் தனியே எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் என ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க விருப்பதால், மேகலா பிக்சர்சிலிருந்து விலகிக் கொள்ள அனுமதி கேட்டார். செல்லமுத்துவும் நானும் அவர்கள் இருவரும் தனியே பேசட்டும் என எண்ணி வெளியே போய் உட்கார்ந்தோம். “நாம், திரைப்படத்தில் வரும் ‘மாரி மகமாயி’ மெட்டில் ஒரு பாட்டு எழுதுங்க அண்ணே! நான் பாடறேன்” என்றார் செல்லமுத்து. உடனே நான் எழுதித் தந்தேன். 1953ல் நிறைய மேடைகளில் முழங்கினார் இந்தப் பாடலைச் செல்லமுத்து.

சேர வருவீரே! சேர வருவீரே!
வீர ரெல்லாம் வேகமாகச் (சேர)
சேர சோழத் தென் பாண்டி நாட்டார்
தீர காவியம் தீட்டிடும் போரில் (சேர)

சரணம், டால்மியாபுரம் பெயர் மாற்றங்குறித்து 5 அடிகள்.

இந்தப் பல்லவி, அனுபல்லவியை நினைவில் வைத் திருந்து, பிறகு ஒருநாள், அண்ணா முன்பு சொல்வி யிருந்ததை மறவாமல் 4 சரணங்கள் சேர்த்து, ஒரு பாடல் எழுதினேன். அதைத் “திராவிடநாடு” ஏட்டின் முதல் பக்கத்தில் 17.7.1960ல் வெளியிட்டுச் சிறப்பித்தார் அண்ணா.

வாழும் வடக்கின் வஞ்சகச் செயலால்
தாழும் தெற்கினைச் சமன்செயும் போரில் (சேர)
செந்தமிழ்த் தாயின் சிறப்பினை அழிக்கும்
இந்தித் திணிப்பினை எதிர்த்திடும் போரில் (சேர)
நாட்டை மீட்டிடும் நற்பணி புரிய
வீட்டுக் கொருவர் விரைந்திடும் போரில் (சேர)
உறுதியோடும் நம் உரிமையைக் காக்கக்
குருதி சிந்திடும் ஒருபெரும் போரில் (சேர)

இன்று இருக்கும் சூழ்நிலையில், அண்ணா இருந்தால், இந்தப் பாடலையே பாடச் சொல்வார் அல்லவா நமது கழக மேடைகளில்? அத்தோடு அண்ணா அடிக்கடி ஆசைப் பட்டதுபோல, கைதேர்ந்த நாட்டியப் பேராசிரியர் ஒருவரைக் கொண்டு பயிற்சி கொடுத்து, ஆசான் அவர்களே நட்டுவாங்கம் செய்து, ஜதி சொல்லிப் பதம்பாட்டி அலாரிப்பு, ஜதீஸ்வரம், தில்லானா, வர்ணம்-எல்லாம் முடித்து, அபிநயம், முத்திரைகளுடன் நாட்டியமாகச் சில பெண்மணிகள் இப்பாடல்களுக்கு வடிவம் தந்தால் எவ்வளவு பிரமாதமாக இருக்கும்!