பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



197 சூத்திரம்-குரு) இறையனார் அகப்பொருள் 'நம்பெருமாட்டி பிறந்த குலம் மேனாள் தொட்டும் ஒழுக்கச் சிதைவின்றி விழுப்பமுடைத்தாய் ஓங்கி வாராநின்றதொரு பெருங்குலமன்றே, அக்குலத்தை நீ அழித்தல் தக்கதோ ! நாணும் கற்பும் அன்றே பெண்டிர்க்கு அணிகலமாவன என்பதனால், இக்குலத்தினவர் கற்பெனப்பட்ட சிறை அழி யாமை காத்துக்கொண்டொழுகினார், அதனை நீ அழிக்கின்றா யாகலின் நின்கட் பெரியதோர் பழியாக்குகின்றாய்' என்றும், 'நம்பெருமானும் தமது ஆண்மைத்தன்மை காட்டிப் பிரிந்தார், நீயும் அவர் கருதியது முடித்துவருந் துணையும் கற்புக்காத்திருக்க வேண்டும்' என்றும், 'சான்றோர் மகளிர் என்பார் சிறியரன்றிப் பெரியராகல்வேண்டும்; அத்தன்மை யென்பது தங்குலநோக்கித் தம் கற்புக்காத்து ஒழுகின், அதனின் மிக்கதில்லை' என்றும் இவ்வகை ஆற்றுவித்தல், சிறைப்புறங் குறித்தல்' என்பது; அதற்குச் செய்யுள் : சிறைப்புறங் குறித்தல் உலத்திற் பொலிந்த திண் தோள் மன்ன னொண்தே ருசிதன் மற்றிக் நிலத்திற் பொலிந்தசெங் கோலவ னீள் புனற் கூடலன்ன கலத்திற்கு நாணிற்குங் கற்பிற்கு 'ஞானத்தி னல்லகங்கள் குலத்திற்குந் தக்கதன் றாலின்னை யாகுதல் கோல்வளையே.' (கூகங) இவ்வகை சொல்லி ஆற்றுவித்தலே, “சிறைப்புறங் குறித்தல்' என்றவாறு. | சூத்திரம் - ருரு சிறைப்புறம் குறியா தோன்றலும் உளவே அவற்புணர் வறியும் குறிப்பின் ஆன. என்பது என்னு தலிற்றோ எனின், தலைமகன் பிரிந்தவழித் தலைமகள் ஆற்றாளாயினவிடத்துத் தலைமகனது வரவுசொல்லி ஆற்றுவிக்க என்பது உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள் : சிறைப்புறம் குறியா தோன்றலும் உளவே என்பது - மேல் தோழி கற்பெனப்பட்ட சிறையை அழிக்கின்றாயென்றன்றே ஆற்றுவித்தது, அவ்வாறன்றி வருவன வும் உள என்றவாறு; அவன் புணர்வு அறியும் குறிப்பின் ஆன என்பது - தலைமகன் வினைமுற்றியானும் பொருண்முற்றியானும் வருங் குறிப்பின் கண் என்றவாறு. 1. ஞாலத்தி.