தமிழ்ப் பழமொழிகள்
115
எட்டுக் கொட்டைப் பாக்கு என்பதா?
வட்டுவத்திலே சொட்டு விழுந்தால் பாக்கு வெட்டிக்கு வேறே;கரண்டகத்துக்கு
- வேறேயா?
18490
வட்டுவத்தின் மேலே சொட்டுப் போட்டால் வட்டுவத்துக்கு மாத்திரமா படும்?
வடககத்தியானையும் வயிற்று வலியையும் நம்பல் ஆகாது.
வடக்குப்பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த தெருத் திண்ணை
- நல்லது.
வடக்கே கறுத்தால் மழை வரும்.
வடக்கே சாய்ந்தால் வரப்பெல்லாம் நெல். 19495
வடக்கே சாய்ந்தால் வரபெல்லாம் நெல்; தெற்கே சாய்ந்தால் தெரு எல்லாம் வெட்டி.
வடிக்கிறது நாழி, அகப்பை பதினாறு, நீயும் பிள்ளைத் தாய்ச்சி,
- நானும் வேலைக்காரன், பார்த்து வட்டித்துப் பழையது மீத்தடி.
வடி கட்டின முட்டாள்.
வடித்த கஞ்சி கொடுக்காத சிற்றப்பன் வாய்க்கால் கரைமட்டும் வழி வந்தானாம்.
வடித்த கஞ்சி வார்க்காத சிற்றப்பன் வழித்துக் கொண்டானாம் பணம் இட. 19500
வடித்தால் காணுமா? பொங்கினால் காணுமா?
வடித்து நிமிர்த்தி வாழைக்காய் உப்பேறி யார் வைத்திருக்கிறார்?
வடிவில் பெண், பட்டிக்காட்டு ஓணான்.
வடிவிலே மன்மதன் போல.
வடுகச்சி அம்மா வால் அம்மா, வாசலைப் பிடித்துக் கொண்டு தொங்கம்மா. 19505
வடுகச்சி காரியம் கடுகுச்சு, முடுகுச்சு.
வடுகத் துறட்டு மகாவில்லங்கம்.
வடுகத் துறடும் துலுக்க முரடும்.