66
தமிழ்ப் பழமொழிகள்
அற முறுக்கினால் கொடி முறுக்குப் படும்.
அற முறுக்குக் கொடும்புரி கொண்டு அற்று விடும். 1500
அறவடித்த ...........சோறுகழுநீர்ப் பானையில் விழுந்தாற் போல்.
- (பி.ம்.) காடிப் பானையில்
அறவில்............. வாணிகம்.
அறவும் கொடுங்கோலரசன் கீழ்க் குடியிருப்பிலும் குறவன் கிழ்க் குடியிருப்பு மேல்.
அறவைக்கு வாய் பெரிது; அஞ்சாறு அரிசிக்குச் கொதி பெரிது.
அறிவுக்கு அழகு அகத்து உணர்ந்து அறிதல். 1505
அறிந்த ஆண்டை என்று கும்பிடப் போனால் உங்கள் அப்பன் பத்துப்பணம் கொடுக்கவேணும் கொடு என்றான்.
அறிந்த பார்ப்பான் சிநேகிதக்காரன், ஆறு காசுக்கு மூணு தோசை-----
- (பி-ம்.) அறிந்த பார்ப்பான் தோசைக்குப் போனால்.
அறிந்தவன் அறிய வேண்டும், அரியாலைப் பனாட்டை.
- (யாழ்ப்பாண வழக்கு பனாட்டு-பன வெல்லத்தில் பண்ணும் தின்பண்டம் பினாட்டுத்தட்டை.)
அறிந்தவன் என்று கும்பிட அடிமை வழக்கு இட்டாற் போல.
- (பி-ம்.) வழக்கு பிடித்து இட்டாற் போல.
அறிந்து அறிந்து கெட்டவர் உண்டா? 1510
அறிந்து அறிந்து செய்கிற பாவத்தை அழுது அழுது தொலைக்க வேணும்.
அறிந்து அறிந்து பாவத்தைப் பண்ணி அழுது அழுது அனுபவித்தல்.
அறிந்து கெட்டேன்; அறியாமலும் கெட்டேன்; சொறிந்தும் புண்ணாச்சு.
அறிய அறியக் கெடுவார் உண்டா?
- (பி-ம்.) கெட்டவர்.
அறியாக் குளியாம் கருமாறிப் பாய்ச்சல். 1515
அறியாத ஊருக்குப் புரியாத வழி காட்டினாற் போல்.
அறியாத நாள் எல்லாம் பிறவாத நாள்.
அறியாப் பாவம் பறியாய்ப் போச்சு.
- (பி-ம்) பொறியாய்.
அறியாப் பிள்ளை ஆனாலும் ஆடுவான் மூப்பு.
அறியாப் பிள்ளை புத்தியைப் போல. 1520
அறியாமல் தாடி வளர்த்து அம்பட்டன் கையிற் கொடுக்கவா?
அறியா விட்டால் அசலைப் பார்; தெரியா விட்டால் தெருவைப்பார்.